வாடல் நோய் செடி முழுமையும் பாதிக்கும் நோயாகும். ஒரு பகுதியாகவோ, செடி முழுவதுமாகவோ வாடிவிடும்.
சவுக்கு, தேக்கு மற்றும் பல்வேறு வனமர வகைகள்.
வெர்ட்டிசில்லியம் மற்றும் பியூசெரியம் போன்ற பூஞ்சைகளும், சூடோமோனஸ் சோலனேசியாரம் போன்ற பாக்டீரியாக்களும் இளந்தோப்புகளில் நோய் உண்டாக்கும்.
அ) இலைகள் மஞ்சளாகி, விறைத்து, விழுந்து விடுதல்.
ஆ) பாதிக்கப்பட்ட கிளை அல்லது செடி இறந்துவிடுதல்.
இ) செல் அழுகல், குறை வளர்ச்சி.
ஈ) தடிமரத்தின் உள்பகுதி நிறமாற்றம்.
கண்டறிதல் : தொடர் கண்காணிப்பு மூலம் செடி இறப்பு கண்டறிதல்.
அழித்தல் : நோயுற்ற மரங்களை நீக்கி எரித்து விடுதல் அல்லது புதைத்து விடுதல்.
நோய் எதிர்ப்பு மர இனங்கள் : நோய்க்கு எதிர்ப்பாற்றல் கொண்ட மர இனங்களை
நடவு செய்தல்.
வனத் தோட்டங்களில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் நோய்களில் முதன்மையானது இந்நோயாகும். பூசணப்படலம் மற்றும் மரவகைக்கு ஏற்ப இந்நோயின் தாக்க விகிதம் மாறுபடுகிறது. பொதுவாக பட்டை மற்றும் வெளித் தண்டுப் பகுதியே, பெரிய பாதுகாப்பை மையத் தண்டுப் பகுதிக்கு அளிக்கிறது. வைரம் பாய்ந்த மரங்களை, சுமார் 15-30 ஆண்டு வயதுக்கு பிறகு தாக்குகிறது.
வேலமரம், வாகை, தேவதாரு, தைலம், பைன், சால், சிசு மற்றும் மருது ஆகியன.
கேனோடெர்மா, போம்ஸ், ஹைம்னோ சேட்டே, டிரமேட்ஸ் மற்றும் அர்மிலேரியா போன்ற பூஞ்சை இனங்கள்.
அ) முதல் அறிகுறியாக நிறமாற்றம் ஏற்படும். தண்டு மேல்பகுதி பச்சை பழுப்பு நிறமாகவும், தண்டு உள்பகுதி கருப்பு, கரு ஊதா நிறமாகவும் மாறி இருக்கும்.
ஆ) பூசணப்படலம், பூஞ்சை முடிச்சுகள், தண்டு வீக்கம், முடிச்சு வீக்கம், உடைந்த மேல் பகுதிகள், தண்டுப்பகுதி காயம் மற்றும் தழும்புகள்,அடிமரப்பகுதி காயம், வெடிப்புகள் போன்றவை இருக்கும்.
இ) வைரம் பாய்ந்த உள் தண்டுப் பகுதியில் ஏற்படும் சிதைவை கண்டறிவது சிரமம். எனினும் சாதாரண வைரம் தன் நிறம் இழந்து கருப்பாக மாறி விடும், அதுபோல பாதிக்கப்பட்ட மரத்தின் தண்டுகள் காணப்படும்.
அ) களை எடுக்கும் போது மரங்களில் காயந்த சிராய்ப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆ) நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மர ரகங்களை பயிரிடலாம்.
இ) தோப்பிலிருந்து நோயுற்ற மரங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
வெப்பமண்டல பிரதேசங்களில் அதிக அளவு மழை பெய்யக் கூடிய பகுதிகளில் பரவலாக காணப்படும். பூஞ்சை நோய்க் கிருமியால் எற்படும் இந்நோய் தோப்பாக வளரும் முக்கிய மர இனங்களை தாக்குகிறது.
வெப்பமான காற்று, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் நோய் தீவிரமடைகிறது. நோய்க் கிருமியானது எல்லா வயதுள்ள மரங்களையும் பாதிக்கிறது. காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் மூலம் நோய்த் தொற்று பரவுகிறது. 250 செ.மீ கோடை மழைப் பொழிவுள்ள வெப்ப மண்டல சூழ்நிலைகளில் தோப்புகளில் திடீர்த்தொற்று ஏற்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும் பரவலாக காணப்படும் இந்நோய் தைலம் மற்றும் இதர மர இனங்களை தாக்குகிறது. இந்தியாவில், யூகலிப்டஸ் சிட்ரியோடோரா, யூகலிப்டஸ் குளோபுலஸ், யூகலிப்டஸ் கிராண்டிஸ், யூகலிப்டஸ் டெரட்டிகார்னிஸ் ஆகியவற்றையும், மாஞ்சியம், வேம்பு, சவுக்கு, மா, புளி, தேக்கு, சவுண்டால் ஆகியவற்றையும் தாக்குகிறது.
கார்ட்டீசியம் சல்மானிக்கலர் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது.
வேலமரம், வாகை, பாக்கு, கொன்றை, சவுக்கு, கோகோ, ஈட்டி, தைலம், மா, பைன், வேங்கை, புங்கம், புளி, மருது போன்ற பல்வேறு மர இனங்களை தாக்கக்கூடியது ஆகும்.
கோனோடெர்மா பூஞ்சை பல்வேறு மரவகைகளில் வேர் அழுகலை உண்டாக்குகிறது. பாலிபோரஸ் சொரியே, சால் மரத்திலும், போம்ஸ் அன்னோகல் ஊசி இலை மர இனங்களிலும் பெனியோபோரா ரைசோமார்போ மூலம் தேக்கிலும் நோய் ஏற்படுகிறது.
அ) நுனிக்கருகல் மற்றும் குறைபாடுள்ள வளர்ச்சி.
ஆ) இலைகள் பழுப்பு நிறமாதல்.
இ) இளங்குருத்துகள் வாடத் தொடங்கும். நோய் முற்றிய நிலையில் இலைகள் பூராவும் உதிர்ந்து மான் கொம்பு தோற்றத்தில் காணப்படும். காற்றில் விழுந்து விடும்.
ஈ) வனத் தோட்டங்களில் நோய் தாக்கிய மரத்தொகுதி வட்ட வடிவில் இருக்கும். சுற்றிலும் கிருமித் தொற்று வேர் மூலம் பரவுவதால், வெளி வட்டப் பகுதி குறைந்த பாதிப்புடனும், உள்ள வட்டம் தீவிர பாதிப்புடனும் இருக்கும்.
உ) வேர் வழித் தொற்று பரவப் பரவ, பாதிப்பு வட்டம் பெரிதாகி வரும்.
ஊ) நோயுற்ற மரத்தின் வேர் வெளிப் பகுதிகளில் நோய் வெண்படலம் காணப்படும்.
பல்வேறு தோப்பு மரங்களில் காணப்படுகிறது. குறிப்பாக தைல மரத்தில் இந்த பூஞ்சாண தாக்குதல் காணப்படுகிறது.
வேலமரம், தைலம், பைன், சால், சிசு, தேக்கு மற்றும் மருது ஆகியன.
போமா, போமோப்சிஸ் மற்றும் லேசியோடைபிளாபியா போன்ற பூஞ்சைகள் நோய் ஏற்பட காரணமாகின்றன.
அ) சற்றே தாழ்வான தண்டுப் பகுதியிலிருந்து 15-20 செ.மீ. நீளமுள்ள நிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு பருவமழைக்கு பின்னர் பாதிப்படைகின்றன.
ஆ) தாழ்வான பட்டை பழுப்பு நிறமடைந்து இறந்து விடும். பிளவு அதிகரித்து பட்டை நீளவாக்கில் வெடித்து காணப்படும்.
இ) ஒரு சில பிளவுகளில் பிசின் சுரப்பு காணப்படும்.
ஈ) பின் வாடிப் போய் இறந்து விடும்.
களை எடுப்பு மற்றும் மண் வேலைகளின் போது செடிகள் மற்றும் இளம் மரங்களில் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். பொருத்தமான இடத்தேர்வு மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மர ரகங்களை தேர்வு செய்வது ஆகியன நீண்ட காலத்திற்கு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் வழிகளாகும்.
சவுக்கில் ஏற்படும் மிகத் தீவிரமான நோய்களில் இதுவும் ஒன்று. இளம் மற்றும் முதிர்ந்த தோப்புகளில், குறிப்பாக கடலோரப் பகுதி தோப்புகளில் ஏற்படுகிறது. நாட்டின் உள்பகுதிகளிலும் சவுக்கு மரங்களில் இது காணப்படுகிறது.
சுப்ரமணியனோஸ்போரா என்னும் கிருமியால் உண்டாகிறது. (டிரைகோஸ்போரியம் வெசிகுளோசம்).
அ) இலை ஊசிகள் மஞ்சள் நிறமடைவது தொடக்க நிலை அறிகுறி.
ஆ) இலை ஊசிகள் வறண்டு, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிக்கும் பரவுகிறது.
இ) வேகமான வாடல், பழுப்பு நிறமாதல் மற்றும் நுனிக்கருகல், தனி மரமாகவோ, தோப்பு முழுவதுமோ ஏற்படுதல்.
ஈ) நோய் முற்றிய நிலையில், பட்டைப் புண் தோன்றும்.